அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் | |
---|---|
மூலவர் | வைத்தியநாதசுவாமி |
உற்சவர் | - |
அம்மன்/தாயார் | சுந்தராம்பிகை, பாலாம்பிகை |
தல விருட்சம் | பனை மரம் |
தீர்த்தம் | கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் |
ஆகமம்/பூஜை | காமிய ஆகமம் |
பழமை | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | திருமழபாடி |
மாவட்டம் | அரியலூர் |
மாநிலம் | தமிழ்நாடு |
தல சிறப்பு: | |
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும். | |
திறக்கும் நேரம்: | |
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
முகவரி: | |
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம். | |
போன்: | |
+91 98433 60716 | |
பொது தகவல்: | |
இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு. |
|
தல வரலாறு: | |
திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம்
செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும்
அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள்
மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார்.
இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை.
இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார். |
|
சிறப்பம்சம்: | |
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
|
Ref: http://temple.dinamalar.com/New.php?id=438 |
Ariyalur is a town and district headquarters of Ariyalur district in the South Indian state of Tamil Nadu and rich limestone and surrounded with seven cement factory and two sugar factory. The town is located at a distance of 310 km from the state capital Chennai.
Ariyalur District - Sri Vaidyanathaswami temple
Subscribe to:
Posts (Atom)
Schools in Ariyalur district
1 Agathiyar Nursery & Primary School Udayarpalayam - Ariyalur (Dt) 2 Alpha ...
-
PUNJAB NATIONAL BANK - Ariyalur S.No Branch IFSC ...
-
1 Agathiyar Nursery & Primary School Udayarpalayam - Ariyalur (Dt) 2 Alpha ...
-
Ariyalur is a Municipality in Ariyalur district in the state of Tamil Nadu, India Ariyalur is one of the districts in Tamil Nadu state. I...
No comments:
Post a Comment